பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்கவுன்டரே தீர்வு: பிரேமலதா பேட்டி

வலங்கைமான்: பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்கவுன்டரே தீர்வு என பிரேமலதா கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திருப்தி இல்லை. இதனை கண்டித்து விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளோம். கும்பகோணத்தில் காவலர் கையை முறித்து வன்முறை சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஒரு கடை கூட மூடவில்லை என குற்றசாட்டு எழுந்து வருகிறது. அதனை நிரந்தரமாக மூட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனை தேமுதிக வண்மையாக கண்டிக்கிறது. மாற்றம் வேணும் என்றும், விஜய் வந்தால் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு காண்பார் என்றும் நினைத்து வாக்களித்துள்ளார்கள்.

குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அரபு நாடுகள் போல தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம்தோறும் நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்கவுன்டர் மட்டும் தான் தீர்வு.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: