வெப்பநிலையை அளவிட டிகிரியா? சென்டிமீட்டரா? தவெக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் குழப்பம்

சென்னை: இந்த மாதம் 4ம் தேதி பள்ளி திறப்பதற்கு வெப்பநிலை டிகிரியா? சென்டிமீட்டரா? என தவெக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் குழப்பிய வீடியோ சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது. தவெக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது: வெப்பநிலை இப்போது குறைந்து இருக்கிறது.

41 சென்டிமீட்டரில் இருந்து 35 சென்டிமீட்டராக குறைந்திருக்கிறது. 4ம் தேதி பள்ளி திறப்பதற்கு வெப்ப நிலை குறைந்திருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். 41 சென்டி மீட்டர் என்பது 35 சென்டிமீட்டராக குறைந்திருக்கிறது என்றார். அமைச்சர் செங்கோட்டையன் வெப்பநிலையை டிகிரி செல்சியஸில் அளவிட வேண்டும் என்பதை மறந்து, குழப்பத்தில் சென்டிமீட்டராகக் குறிப்பிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

 

Related Stories: