கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: கோயம்பேடு அருகே தனியார் மதுபான பார் உள்ளது. கடந்த 31-தேதி இரவு மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், இளம்பெண் யான்சி தரப்பினரும் மற்றும் பாலகுரு தரப்பினரும் வெளியேற்றப்பட்டனர். இரு தரப்பினரும் சாலையிலும் மோதி கொண்டனர்.

இந்த நிலையில், இளம்பெண் பாரை விட்டு வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை துரத்தி வந்த கும்பல் காரை கொண்டு மோதியதால் யான்சி என்னும் இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 17 வயது சிறுமி படுகாயமடைந்து மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த தனியார் நட்சத்திர விடுதி மதுபான பாருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories: