சென்னை: தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தனியார் பள்ளிகள் அனைத்தும் கல்விக் கட்டணம் விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வைக்க வேண்டும். வகுப்புவாரியாக மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அனைத்து பள்ளிகளும் அச்சிட்டு வழங்க வேண்டும்.
அதனுடன், பள்ளிகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். கல்விக் கட்டணத்தை தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக்கூடாது. இந்த வழிமுறைகளை பின்பற்றி அனைத்து தனியார் பள்ளிகளும் ஜூன் 5ம் தேதிக்குள் கல்விக் கட்டண தகவல்களை விளம்பரப்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதுசார்ந்த விவர அறிக்கையை இயக்குநரகத்தில் ஜூன் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
