×

ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த குட்கா மூட்டை பறிமுதல்

 

கோவை,மே18: ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 4 கிலோ குட்கா மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது ரயில் நிலையம் பகுதியில் உள்ள வங்கிக்கு பின்னால் ஒரு மூட்டை கேட்பாரற்று கிடந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 கிலோ 200 கிராம் குட்காவை மீட்டு, அதனை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குனியமுத்தூர் போலீசார் இடையர்பாளையம் அருகே குட்கா மூட்டையுடன் நின்றிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாதன் (37) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2கிலோ 700 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.

Tags : Coimbatore ,Coimbatore Racecourse ,
× RELATED கோவில்பட்டியில் லாரி மீது கார் மோதி கோவை பெண் பலி