கோவை, மே 19: கோவை காந்திபுரத்தில் இரண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் 120 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இதில் இறங்கு, ஏறு தளம் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் கீழே இறங்க முடியாத நிலை இருந்தது. குறிப்பாக கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு பகுதியில் வாகனங்கள் இறங்க முடியவில்லை. இதனால் மேம்பாலம் அமைத்தும் போக்குவரத்து நெரிசல் நிலை காணப்பட்டது. இதை தவிர்க்க 2020ம் ஆண்டில் 23.96 கோடி ரூபாய் செலவில் பாரதியார் ரோடு மற்றும் 100 அடி ரோட்டில் இறங்கும் வகையில் 2 சாய்வான பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த பணி நடக்கவில்லை. தற்போது 6 ஆண்டு காத்திருப்பிற்கு பின் மாநில நெடுஞ்சாலைத்துறையில் இதற்கான பணிகள் செய்ய ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. இதற்கு 6 ஆண்டிற்கு முன் போட்ட திட்ட மதிப்பை காட்டிலும் 30 சதவீதம் கூடுதல் தொகை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
