கோவை, மே 20: பொதுமக்களுக்கு தரமான உணவுகளை வழங்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும் மற்றும் சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை வழங்கவும் தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, நேற்று கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 45வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பிரதான சாலை, புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
