×

குறைதீர் கூட்டத்தில் குவியும் விண்ணப்பங்கள்

 

கோவை, மே 19: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பவன்குமார், வருவாய் அலுவலர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு 312 மனுக்கள், வேலை வாய்ப்பு கேட்டு 8 மனுக்கள், 182 இதர மனுக்கள் என 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ஆட்சி மாறிய பின்னர், மகளிர் உரிமை தொகை கேட்டு அதிகளவு மனுக்கள் வருகிறது. ஆனால் வருவாய்த்துறையினர், சமூக பாதுகாப்பு திட்டத்தினர் இந்த மனுக்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு எந்த தகவலும் முறையாக தெரிவிக்கவில்லை. தவெக அறிவித்தபடி, 2500 ரூபாய் உரிமை தொகை கிடைக்குமா, திமுக அறிவித்த படி ஏற்கனவே வழங்கப்படுமா ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்குமா என தெரியாத நிலையிருக்கிறது.

Tags : Goa ,People's Blame Day Camp ,Goa District Collector ,Office ,Collector ,Bhavankumar ,Revenue Officer ,Narayanan ,
× RELATED கோவில்பட்டியில் லாரி மீது கார் மோதி கோவை பெண் பலி