போனில் மனைவியுடன் வாக்குவாதம் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

திருப்பூர், மே 12: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அபிஜிதாஸ் (30). இவருக்கு மனவைி, குழந்தைகள் உள்ளனர். இவர், திருப்பூர் அம்மாபாளையம் அடுத்த பாரதி நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் தங்கி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக மனைவியுடன் போனில் வாக்குவாதம் செய்தார். நேற்று காலை அபிஜிதாஸ் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது அபிஜிதாஸ் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து அபிஜிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: