×

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

 

ஈரோடு, மே 15: ஈரோடு எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட் அருகே நேற்று காலை 7 மணிக்கு முன்னதாக 40 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் அடையாளம் தெரியாத அந்த நபர் பலியானார். காக்கி கலர் பேண்ட், மஞ்சள்புளுரோஸ் நிற சட்டை அணிந்து இருந்தார். இரு கால்களும் சிதைந்து இருந்தது. நெஞ்சின் வடது பகுதியில் தழும்பும், வயிற்றின் இடது பகுதியில் மச்சமும் காணப்பட்டது. இறந்தவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Erode ,Erode Railway Police ,Erode Electrical Loco Shed ,
× RELATED சென்னிமலை அருகே முதியவர் மயங்கி விழுந்து சாவு