×

படிக்கட்டு வழியாக சென்ற பக்தர் மயங்கி விழுந்து சாவு

 

சென்னிமலை, மே 15: சென்னிமலை முருகன் கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்றவர் மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் சின்னகவுண்டர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). இவர் நேற்று காலையில் இவருடைய நண்பர் ஒருவருடன் சென்னிமலைக்கு வந்தார். பின்னர் மலைமேல் உள்ள முருகன் கோயிலுக்கு நண்பருடன் படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்றார். அப்போது திடீரென ராஜேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் ராஜேந்திரனுக்கு முதலுதவி செய்யப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இறந்து போன ராஜேந்திரனுக்கு பூங்கொடி என்ற மனைவியும், தங்கமிதுன் என்ற மகனும் உள்ளனர்.

Tags : Chennimalai ,Chennimalai Murugan ,Rajendran ,Chinnagounder Nagar ,Manickampalayam, Erode ,
× RELATED சென்னிமலை அருகே முதியவர் மயங்கி விழுந்து சாவு