×

27 டாஸ்மாக் கடைகள் மாவட்டத்தில் மூடல்

ஊட்டி, மே 13: தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ் மற்றும் ரயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவின் படி 27 கடைகளை மூட திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு டாஸ்மாக் கடைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பந்தலூரில் உள்ள மதுக்கடை மூடப்பட்டு உள்ளது. இது குறித்து கடையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

 

Tags : TASMAC ,Tamil Nadu ,
× RELATED ஊஞ்சல் விளையாடியபோது பரிதாபம் பீரோ கவிழ்ந்து சிறுமி பலி