×

போன் பேசியபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

 

திருப்பூர், மே 12: திருப்பூர் ஓடக்காடு பங்களா வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மனைவியை பிரிந்த பாலமுருகன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடி அறையில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், பாலமுருகன் போதையில் நள்ளிரவில் மொட்டை மாடியில் நின்று நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் பாலமுருகன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்
தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார், பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruppur ,Balamurugan ,Odakadu Bungalow Road, Tiruppur ,
× RELATED அமராவதி அணையில் மீன் பிடிக்கும் உரிமம் தனியாரிடம் ஒப்படைப்பு