திருப்பூர்,மே9: திருப்பூர் மாநகர போலீசில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை இடமாற்றம் செய்து கமிஷனர் ராஜேந்திரன் உள்ளார். அதாவது போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 13 சிறப்பு எஸ்.எஸ்.ஐக்கள், ஏட்டுகள்,
பெண் போலீசார் என 188 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக விடுவிக்கவும், அவர்கள் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
