×

காங்கயத்தில் கைவிடப்பட்ட கால்நடை மருத்துவ கிளை நிலையம்

 

காங்கயம், மே 12: காங்கயம் வீரணம்பாளையம் பட்டாக்காரன்புதூரில் கால்நடை மருத்துவக் கிளை நிலையம் உள்ளது. அனைத்து கால்நடைகளுக்கும் இந்த மருத்துவ கிளை நிலையத்தில் சிகிச்சை பார்க்கின்றனர். இந்த நிலையில், சீரமைக்க வேண்டிய நிலையில் இருந்த மருத்துவ கிளை நிலையத்தில் சமீப காலமாக துறை சார்ந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
ஆனால் கட்டிடத்தை சுற்றி பெயிண்ட் பூசியதில் பின்புறமும் முற்றிலுமாக பெயிண்ட் பூசாமல் விடப்பட்டுள்ளது. மேலும், மேற்கூரையின் ஏற்பட்ட பழுதுகளை சீரமைத்து புதிய ஓடுகள் அமைக்காமலும் பணி முடிக்கபட்டுள்ளது. இதனை கண்டறிந்த அப்பகுதி விவசாயிகள் மருத்துவ கட்டிடத்தில் மேற்கண்ட பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது புகார் தெரிவித்தனர். மேலும், பணியை முழுமையாக முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kangayam ,Veeranampalayam Pattakaranputhur ,
× RELATED அமராவதி அணையில் மீன் பிடிக்கும் உரிமம் தனியாரிடம் ஒப்படைப்பு