திருத்துறைப்பூண்டியில் இரு சக்கர வாகனம் திருட்டு

திருத்துறைப்பூண்டி, மே 4: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆற்று ரோடு பகுதி வசிப்பவர் சையது இப்ராஷிம்(31). இவரது இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் மதியம் வீட்டு முன்பு நிறுத்தி விட்டு திரும்பி வந்த பார்த்த போது காணவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் குற்ற நடவடிக்கை குறைக்க திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புதிதாக குற்ற பிரிவு ஏற்படுத்தி போதுமான அளவில் போலீசார் நியமிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: