வங்கதேசத்தினர் பற்றிய அசாம் முதல்வர் பேச்சுக்கு வங்கதேசம் எதிர்ப்பு: இந்திய தூதருக்கு சம்மன்

டாக்கா: வங்கதேசத்தினர் பற்றி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு வங்கதேச வௌியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அசாமில் ஆட்சி செய்து வரும் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ அரசு, அசாமில் சட்டவிரோதமாக குறியேறி உள்ள வங்கதேசத்தினரை நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை(ஏப்25) 20 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டனர். இதுகுறித்து பேசியிருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, “முரட்டுத்தனமான மக்களுக்கு மென்மையான மொழி புரியாது” என தெரிவித்திருந்தார். ஹிமந்த பிஸ்வா சர்மாவின் இந்த பேச்சுக்கு இந்தியாவின் பொறுப்பு தூதர் பவன் பாதேவை வெளியுறவு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து வங்கதேச வௌியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.அப்போது, இதுபோன்ற கருத்துகள் இருநாடுகளிடையேயான நட்புறவை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பின் முக்கியமான பிரச்னைகளை தீர்க்கும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வங்கதேசம் அறிவுறுத்தியது.

Related Stories: