கஞ்சா விற்ற ரவுடி கைது

 

திருச்சி, ஆக.3: திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது செய்யப்பட்டார். திருச்சி எடமலைப்பட்டி புதுார் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஆக.1ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை மெயின் ரோடு அருகே கஞ்சா விற்ற டவுன் ஸ்டேசன் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தினேஷ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னா் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: