துறையூர்-திருச்சி சாலையில் சென்டர் மீடியன் ஓரம் குவியும் குப்பைகள் அகற்றப்படுமா?

 

துறையூர், ஆக.3: திருச்சி மாவட்டம் துறையூர்- திருச்சி நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையம் முதல் பிரிவு ரோடு ரவுண்டானா வரை சென்டர் மீடியன் ஓரத்தில் பல இடங்களில் குப்பைகள்,புழுதி மணல் தேங்கி உள்ளதால் காற்றில் பறந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்டர் மிடியன் ஓரத்தில் தேங்கும் மற்றும் புழுதி மணல் இருசக்கர வாகன ஓட்டி முகத்திலே அடிப்பதாக கூறுகின்றனர்.

அடிக்கடி சென்ட்ரல் ஓரத்தில் இருக்கும் புழுதி மணல்களை அள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து குப்பைகளை அகற்றி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: