முசிறி, ஜூலை 23: முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை போலீசார் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்தனர். முசிறி அருகே சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி (37). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்குச் சென்றுள்ளார். காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவை திறந்து பீரோவில் இருந்த ஒரு தங்க மூக்குத்தி, வெள்ளி அரைஞாண் கயிறு, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது கண்டு முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்ஐ பிரகாஷ் சொரியம்பட்டி சென்று ஆய்வு மேற்கொண்டார்.
