திருச்சி, ஜூலை 23: கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் கறிக்கோழிகளை விற்பனை செய்வதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தீவன கட்டுப்பாடு முறையை கடைபிடிக்காததால் தங்களுக்கும், நுகர்வோருக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், பொது சுகாதாரத்துக்கும் பங்கம் ஏற்படுவதால், உற்பத்தியாளர்களை தீவனக்கடட்டுப்பாடு முறையை பின்பற்ற உத்தரவிட வலியுறுத்தி கறிக்கோழி விற்பனையாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்
