உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தலைவராக ஆர்.சி.பால்கனகராஜ் வெற்றி: செயலாளராக எஸ்.அறிவழகன் தேர்வு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு 5 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 13 பேரும், செயலாளர் பதவிக்கு 9 பேரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. மொத்தம் 5982 வாக்குகளில் 4353 வாக்குகள் பதிவானது. நேற்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தலைவர் வேட்பாளர்களில் ஆர்.சி.பால்கனகராஜ் 1892 வாக்குகளும், ஆர்.கிருஷ்ணகுமார் 1307 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, ஆர்.சி.பால்கனகராஜ் 585 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.அறிவழகன் வெற்றிபெற்றுள்ளார். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.சசிகுமார், பொருளாளர் பதவிக்கு ஜி.ராஜேஷ் ஆகியோரும் ெவற்றி பெற்றுள்ளனர்.

Related Stories: