அருமனை, ேம 1: கடையாலுமூடு பேரூராட்சி 9-வது வார்டு பகுதிகளில் சாலையோர ஓடை அமைப்பதற்காக தமிழக அரசின் சார்பில் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது. இதை சட்ட விரோதமாக லோடு வாகனத்தில் ஏற்றி குட்டைக்கு ரூ. 75க்கு விலைபேசி விற்க பத்துக்காணி பகுதியை சேர்ந்த விஜயன் (41) என்பவர் முயற்சித்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆறுகாணி போலீசார் அனுமதியின்றி ஜல்லி ஏற்றி வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு முன்னுக்கு பின் முரணாக விஜயன் பதிலளித்துள்ளார். உடனே அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, சாலையோர ஓடை அமைக்க தமிழக அரசு சார்பில் கொட்டப்பட்டிருந்த ஜல்லியை சட்டவிரோதமாக குட்டைக்கு ரூ.75 என விலைபேசி விற்க முயற்சித்ததை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
