விபத்தில் இளைஞர் பலி

வேடசந்தூர், மே 1:வேடசந்தூர் அருகே உள்ள மண்டபம் புதூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் மணிகண்டன் (20). இவர் நூற்பாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று, நண்பரின் பிறந்தநாளுக்காக வேடசந்தூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் அருகே வந்தபோது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து எரியோடு நோக்கிச் சென்ற சரக்கு வாகனம், இவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் மணிகண்டன், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

 

Related Stories: