அவிநாசி, மே 1: அவிநாசி அருகே சேயூர் மூலக்குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர், அண்ணமார்,கருப்பராயன், கன்னிமார், பட்டத்தரசியம்மன், மதுரைவீரன் சுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று மே 1ம் தேதி 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.
சேயூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலிலிருந்து நேற்று தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு மேல் கோவில் வீட்டிலிருந்து முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும், மகாதீபாரானையும் நடைபெற்றது.
