கிணத்துக்கடவு, மே 1: நெகமம் அடுத்த செட்டிபுதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் அரவிந்தன் (18), கூலித்தொழிலாளி இவர் கடந்த 26-ம் தேதி செட்டிபுதூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது நெகமம் ரோட்டில் செல்லும் போது நாய் குறுக்கே வந்ததால் எதிர்பாராத விதமாக அரவிந்தன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்தனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
