மண் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் ஓட்டம்

தர்மபுரி, மே 1: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை கக்கன்ஜிபுரம் ஆஞ்சநேயர் கோயில் அருகில் நேற்று முன்தினம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். உதவி புவியியலாளர் மாணிக்கம்(25) மேற்பார்வையில் நடந்த தணிக்கையின் போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் லாரியை நிறுத்தியதும், டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். பின்னர், லாரியில் சோதனையிட்ட போது, 4 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி உரிமையாளர் மற்றும் தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: