கன்னியாகுமரி: வெளிநாட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த சகோதரிகளான மீரா பிலிப் மற்றும் ஆனி பிலிப் குமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஏப்.26ம் தேதி இரு பெண்கள் 2 நாட்களாக தங்கியிருந்த அறைக்கு திரும்பவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரில் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
