சென்னை: தேர்தல், தேர்வு முடிவுகள் வரும் நாளில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து குழந்தைகளும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்ப்பது இல்லை. சில குழந்தைகள் தவறான முடிவை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.
இந்த முறை தேர்தல் களத்தில் குழந்தைகள் சட்டவிரோதமான முறையில் தூண்டப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை மனரீதியாக தூண்டி தேர்தல் பிரச்சாரம் நடந்ததாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை மனரீதியாக தூண்டி தேர்தல் பிரச்சாரம் நடந்துள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருந்திட பெற்றோர்களே கவனமுடன் செயல்பட வேண்டும்
