சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று இரவு 9 மணி முதல் நாளை இரவு 11 மணிவரை திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 548 பேருந்துகளும், நாளை 565 பேருந்துகளும், நாளை மறுநாள் 35 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மாதவரத்தில் இருந்து இன்று 186 பேருந்துகளும், நாளை 174 சிறப்புப் பேருந்துகளும், இயக்கப்படுகிறது. சென்னை அடையாற்றில் இருந்து இன்று 55 சிறப்புப் பேருந்துகளும், நாளை 50 சிறப்புப் பேருந்துகளும், இயக்கப்படவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 40 SETC சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Related Stories: