நாகர்கோவில், ஏப். 30: குமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் 4 எஸ்ஐக்கள், 4 சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று எஸ்பி ஸ்டாலின் கலந்துரையாடினார். பணி ஓய்வு பெற இருக்கும் போலீசாருக்கு எஸ்பி நினைவு பரிசு மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் எஸ்பி கூறியதாவது: காவல்துறையில் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி ஓய்வுபெறும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். பணி ஓய்விற்கு பின், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வளங்களுடன் வாழ என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் என்றார்.
