புனித செபஸ்தியார் ஆலய விழா

தொண்டி, மே 6: தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சம்பை கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் புதிய கொடிமரம் அர்ச்சிப்பு, திருவிழா கொடியேற்றம், பல்நோக்கு அரங்கம் திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கொடிமரம் மற்றும் பல்நோக்கு அரங்கத்தை சிவகங்கை மறை மாவட்ட ஆயர் முனைவர் ஆனந்தம் அர்ச்சிப்பு செய்து புதிய கொடிமரத்தில் கொடியேற்றினார்.

பல்நோக்கு அரங்கத்தை கிளரீசியன் சென்னை மறை மாநில தலைவர் ஜேசுதாஸ் திறந்து வைத்தார். தொடர்ந்து திருவிழா கொடியேற்ற சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், 1000க்கும் மேற்பட்ட இறைமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: