புதுடெல்லி: நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை காரணமாக, மின்சார நுகர்வு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதன் விளைவாக, ஏப்.25ம் தேதி உச்சபட்ச மின்சார நுகர்வு 256.11 ஜிகாவாட் என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு உச்சபட்ச மின் தேவை 242.8 ஜிகாவாட்டைத் தொட்டது.
இந்த ஆண்டு கோடைக்காலம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டாக இருக்கும் என ஒன்றிய மின்சார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை நிலவுவதால், இந்த மாதம் மின்சாரத் தேவையும் நுகர்வும் மேலும் அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய மின் கட்டமைப்பு கட்டுப்பாட்டாளரின் தரவுகளின்படி வீட்டு மற்றும் வணிக துறைகள் இரண்டிலும் ஏசிகளின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஏப்.23 அன்று 240.12 ஜிகாவாட் பதிவான மின்சார தேவை, ஏப்.24ல் 252.07 ஜிகாவாட்டாக உயர்ந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மின் நுகர்வு 256.11 ஜிகாவாட் என உயர்ந்தது இதற்கு முந்தைய மிக அதிகபட்ச தேவை, கடந்த 2024 மே 30ம் தேதி 249.9 ஜிகாவாட் என பதிவாகியது.
