பெங்களூரு: கர்நாடகாவில் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலையை 20% அளவுக்கு உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆல்கஹாலின் அளவுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததில் இருந்து இதுவரை 4 முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
