×

கரூர் வெங்கமேடு அருகே கோழி, மாட்டு இறைச்சியின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

கரூர், ஏப். 25: கரூர் வெங்கமேடு அருகே வாய்க்காலில் பல்வேறு கழிவுகள் கொட்டப்டுவதால் அனைத்து தரப்பினர்களும் அவதிப்படுகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே வாய்க்கால் செல்கிறது. குடியிருப்புகளை ஒட்டி இந்த வாய்க்கால் செல்கிறது.

இந்நிலையில், இந்த வாய்க்காலில் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும், பகுதியினர்களும் கோழி கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக வாய்க்கால் தண்ணீர் சீராக செல்ல முடியாத சூழல் ஏற்படுவதோடு, பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோழி, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும்.

 

Tags : Vengamedu, Karur ,Karur ,Vengamedu ,Karur Corporation ,
× RELATED வெள்ளியணை பேருந்து நிறுத்தம் அருகே...