- கரூர் சட்டமன்றத் தேர்தல்
- கரூர்
- அரவக்குறிச்சி
- கிருஷ்ணராயபுரம்
- குதலா
- கரூர் சட்டமன்றம்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- குர் மாவட்டம்
கரூர், ஏப். 30: கரூர் சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு தொகுதிகளிலும் 32832 ஆண்கள் வாக்களிக்கவில்லை. கடந்த ஏப்ரல் 23ம்தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கரு்ர் மாவட்டத்தில் அன்றைய தினம் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், அரவக்குறிச்சி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 93172 பேர் உள்ள நிலையில், வாக்குப்பதிவன்று 84690 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதே போல், கரூர் தொகுதியில் 108232 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தல் அன்று 100263 பேர்கள் மட்டுமே வாக்களித்தனர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 98636 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில், 90581 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
இதே போல், குளித்தலை தொகுதியில் 108901 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில், 100575 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதன்படி, நான்கு தொகுதிகளிலும் 408941 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தல் அன்று 376109 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதனடிப்படையில் நான்கு தொகுதிகளிலும் 32832 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
