×

கரூர் மாவட்டத்தில் சாமை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை

கரூர், ஏப். 30: குறு தானியங்களில் ஒன்றான சாமை சாகுபடி மேலாண்மை குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: சாமையின் ரகங்கள், அத்தியேந்தல் 1. விதை அளவை பொறுத்தவரை, வரிசை நடவுக்கு 4 கிலோ, ஏக்கருக்கு. விதைப்பான் மூலம் விதைப்பதற்கு ஏக்கருக்கு 5 கிலோ. விதை நேர்த்தியை பொறுத்தவரை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.

நிலத்தினை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டு கலப்பை கொண்டு 2 மற்றும் 3 முறை நன்றாக உழ வேண்டும். அடியுரம், தொழு உரம் ஏக்கருக்கு 5 டன், தழைச்சத்து, ஏக்கருக்கு 8 கிலோ, மணிச்சத்து ஏக்கருக்கு 9 கிலோ. விதைத்த 15 வது நாளிலும், 40வது நாளிலும் இரண்டு முறை களை எடுக்க வேண்டும். விதைத்த 20வது நாளில் நெருக்கமாக வளர்ந்த செடிகளை கலைக்க வேண்டும்.

 

Tags : Karur ,Agriculture Department ,
× RELATED வெள்ளியணை பேருந்து நிறுத்தம் அருகே...