×

சாலை விபத்தில் தனியார் ஊழியர் உயிரிழப்பு: இஎஸ்ஐ சார்பில் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

கரூர், ஏப். 29: பணிக்கு செல்லும்போது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு இஎஸ்ஐ சார்பில் வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இஎஸ்ஐ காப்பீட்டாளர்களுக்கு, தொழில்சார் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும் போது, இறந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சார்ந்தோர் உதவி தொகையாக இஎஸ்ஐ கழகத்தினால் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இஎஸ்ஐ காப்பீட்டாளர் பிரகாஷ் என்பவர் கடந்த 10.01.2026 அன்று பணியிக்கு செல்லும் போது சாலை விபத்து ஏற்பட்டு 10.01.2026 மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு சார்ந்தோருக்கு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.5288 வழங்க, இஎஸ்ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இயக்குனர் (பொறுப்பு), எஸ்.சிவராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக மறைந்த காப்பீட்டாளர் பணிபுரிந்த அலுவலக வளாகத்தில், கரூர் இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளர் சுந்தரராஜூ, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் தினேஷ்குமார், பழனிவேல் ராஜன், கோபால் தாஸ் முன்னிலையில் உதவித்தொகையை வழங்கினார்.

 

Tags : ESI ,Karur ,
× RELATED கரூர் அமராவதி ஆற்றங்கரையில் சீத்த...