குளித்தலை, ஏப். 25: கரூர் மாவட்டம் குளித்தலையில் திருச்சி கரூர் மெயின் ரோட்டில் மையப் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இதன் அருகில் காவல் நிலையம், உணவு விடுதிகள், தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதனால் அங்கு தினந்தோறும் ஏராளமான ஊர் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் மின் கம்பம் உள்ளது அந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது.
இதனால் ஒரு சில நேரங்களில் மின்தடையும் ஏற்படும். தற்போது கோடை கலம் என்பதால் இரவு நேரத்தில் காற்றின் வேகத்தால் ஏற்படும் மின்தடை ஏற்பட்டும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதனால் நகரத்தின் முக்கிய பகுதியாக இருப்பதால் இதுபோன்று மின்தடை ஏற்பட தடையாக இருக்கும் செடி, கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
