×

க.பரமத்தி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

க. பரமத்தி, ஏப். 25: க.பரமத்தி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக க.பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் க.பரமத்தி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதுபட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் பழனிச்சாமி என்பவர் பள்ளமருதுபட்டி மருதைவீரன் கோயில் அருகே சட்ட விரோதமாக மது விற்றபனை செய்தது தெரிய வந்தது. உடனடியாக க.பரமத்தி போலீசார் விரைந்து சென்று பழனிச்சாமியை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.4800 மதிப்புள்ள 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : K.Paramathi. ,K. Paramathi ,Tamil Nadu Assembly elections ,K.Paramathi… ,
× RELATED கரூர் அமராவதி ஆற்றங்கரையில் சீத்த...