கரூர், ஏப். 23: கரூர் தாந்தோணிமலை சாலையில் நேற்று காலை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் சாலையில் கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் தாந்தோணிமலை சுங்ககேட் இடையே சிவசக்தி நகர் 5 வது பிரிவு அருகே சாலையோரம் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலை முழுதும் பரவி சென்றது.
இதனை அந்த வழியாக ப யணித்த அனைவ ரும் பார்த்துச் சென்றதோடு, சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் தண்ணீர் வீணாகி செல்கிறதே என புலம்பிச் சென்றனர். இந்நிலையில், இந்த பகுதியினர் சம்பந்தப்பட்ட துறையினர்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில், பணியாளர்கள் விரைந்து வந்து உடைப்பை சரி செய்தனர்.எனவே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
