சென்னை: தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 30ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திருப்பூரில் 47 போலி வாக்குகள் பதிவானதால் உரிய விசாரணை நடைபெறும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
