கீழ்வேளூர், ஏப்.19: கீழ்வேளூர் அருகே கொளப்பாட்டில் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் ரூ.55,000 பறிமுதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகில் தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.55 ஆயிரத்தை நாகப்பட்டினம் மாவட்டம் சித்தாய்மூர் வடக்கு தெருவை சேர்ந்த ஜெகதீசன் எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து, கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தமிழ்ச்செல்வி இடம் ஒப்படைத்தனர்.
