தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி நாகையில் திமுக, கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்

நாகப்பட்டினம், ஏப்.19: தமிழ்நாட்டிற்கு பாதிப்பை உருவாக்கும் வகையில் கொண்டு வந்த தொகுதி மறு சீரமைப்பு மசோதா தோல்வி அடைந்ததை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் திமுக கூட்டணி கட்சியினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழ்நாட்டிற்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த தோல்வி பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் தோல்வி என கூறி நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி திடலில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை வகித்தார். நகர செயலாளர் மாரிமுத்து, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வெடி வெடித்து கொண்டாடினர்.

 

Related Stories: