3 மாவட்டத்தில் 105 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் கோடை மற்றும் வறண்ட வானிலை காரணமாக 3 மாவட்டங்களில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகம், புதுச்சேரியில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதன் காரணமாக வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியசும், ஒரு சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்துள்ளது. சில இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கரூர், வேலூர், ஈரோடு மாவட்டங்களில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. நாமக்கல், மதுரை, தர்மபுரி, கோவை மாவட்டங்களில் 102 டிகிரி, திருச்சி, சேலம், பாளையங்கோட்டை 100 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 99 டிகிரி வெயில் நிலவியது.
இதற்கிடையே, 17ம் தேதி வரையில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சென்னையில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: