ராணிப்பேட்டை ஆற்காடு தேவிநகர் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தம்பதி உயிரிழந்தனர். தீ விபத்தில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பவன்லால் (46), மனைவி சுந்தரி (42) ஆகியோர் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
