ஆர்டெமிஸ்-2 திட்டம் வெற்றி பூமிக்கு திரும்பிய நாசா வீரர்கள் குழு

வாஷிங்டன்: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நாசாவின் விண்வௌி வீரர்கள் நேற்று காலை பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவின் விண்வௌி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தொடங்கி உள்ளது. ஆர்டெமிஸ்-2 எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின்கீழ், கடந்த 2ம் தேதி ஓரியான் விண்கலம் மூலம் ஒரு பெண் உள்பட நான்கு விண்வௌி வீரர்களை நாசா நிலவுக்கு அனுப்பியது. ஆர்டெமிஸ்-2 குழுவில் அமெரிக்காவை சேர்ந்த கமான்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடாவை சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் பயணித்தனர். இந்த குழுவினரை இந்திய அமெரிக்கரான அமித் ஷத்ரியா வழிநடத்தினார்.

நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்ற குழுவினர், நிலவுக்கு மிக அருகில்(6,545 கிமீ தொலைவு) சென்று ஆய்வு செய்தனர். மேலும், இக்குழுவினர் நிலவின் பின்பகுதியை முதன்முறையாக பார்த்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களையும் அனுப்பி வைத்தனர். பல்வேறு ஆய்வுகளை முடித்த பின், பூமியை நோக்கி திரும்பிய ஓரியான் விண்கலம் நேற்று அதிகாலை பூமியை வந்தடைந்தது. நிலவை ஆராய்ச்சி செய் 4 விண்வௌி வீரர்களும் பாரசூட் உதவியுடன் பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக இறங்கினர். ஓரியான் விண்கலம், பூமியிலிருந்து புறப்பட்டு, நிலவை சுற்றி வந்து, சுமார் 4,06,771 கிமீ தொலைவு வரை சென்று, பூமிக்கு திரும்பி உள்ளது. மொத்தம் 11 லட்சத்து 2 ஆயிரத்து 398 கிமீ தொலைவுக்கு விண்கலம் பயணித்துள்ளது. இதன் மூலம் அப்பல்லோ 13 விண்கலத்தின் 2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல் பயணம் என்ற சாதனையை முறியடித்துள்ளது.

* யார் இந்த அமித் ஷத்ரியா…
இந்திய-அமெரிக்கரான அமித் ஷத்ரியா, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பரூப்ஃபீல்டில் பிறந்தவர். இவர் கலிஃபோர்னியாவின் பசடேனாவில் உள்ள கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிதத்தில் இளங்கலை பட்டமும், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். நாசாவின் புதிய அசோசியேட் அட்மினிஸ்ட்ரேட்டர், நிர்வாகி ஜாரெட் ஐசக்மேனின் ஆலோசகராகவும் பணியாற்றும் அமித் ஷத்ரியா, நாசாவின் செயல்பாடுகளை வழிநடத்துவதுடன், நாசா தலைமையகத்தில் உள்ள மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகிகளுக்கு தலைமை தாங்குகிறார்.

Related Stories: