முத்தனப்பள்ளி ஊராட்சியில் சேதமடைந்த பள்ளியின் சுற்றுச்சுவரை புதுப்பிக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த முத்தனப்பள்ளி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2025-26ம் ஆண்டில் பள்ளி கட்டிடத்தை புதுப்பிப்பதற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டிட பணிக்கு தேவையான பொருட்களை ஏற்றி வந்த கனரக வாகனம் மோதி பள்ளியின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அப்போதிலிருந்து பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: