திருவள்ளூரில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் கட்ட பிரசாரம் தொடக்கம்: 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 5ம் கட்ட பிரசாரத்தை திருவள்ளூரில் தொடங்குகிறார். அன்றைய தினம் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதே நேரத்தில் வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றி வருகிறார். ஒரு நாளைக்கு இரண்டு நகரங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார். பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை அவர் 4 கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து 5ம் கட்ட பிரசாரத்தை நாளை திருவள்ளூரில் தொடங்குகிறார். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவள்ளூர் மருத்துவ கல்லூரி சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

தொடர்ந்து மாலை 7 மணிக்கு ராணிப்பேட்டை, அரக்கோணம் சோளிங்கர், ஆற்காடு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டை- அம்மூர் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 14ம் தேதி மாலை 5 மணிக்கு வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கீழ்வைத்தியநாதன்குப்பம், குடியாத்தம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பத்தூர் மண்டலவாடி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

15ம் தேதி மாலை 5 மணிக்கு பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து காரிமங்கலம்-பெரியாம்பட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 7 மணிக்கு சேலம் வடக்கு, சேலம் தெற்கு, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

16ம் தேதி நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல் பொம்முகுட்டைமேட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பெரம்பலூர்-ஒதியம் பிரிவு குன்னத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Related Stories: