இலையும், தாமரையும் ஒன்னு எல்.முருகன் பிரசாரம்

அன்னூர்: அவிநாசி தனித்தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அன்னூர் அருகே பிரசாரம் செய்தார். பிரசாரம் முடிந்ததும் பொதுமக்களிடம் ‘‘நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்’’ என்று கேட்டபோது, பொதுமக்கள் ‘‘இரட்டை இலை’’ என்று கூறினர்.

இதைக் கேட்டு வேட்பாளர் முருகனின் முகம் மாறியது. பின்னர் அவர் இரட்டை இலையும், தாமரையும் ஒன்று… இரட்டை இலையும், தாமரையும் ஒன்று… இரட்டை இலையும், தாமரையும் ஒன்று என கூறினார். எம்ஜிஆரின் சின்னம் தாமரை, ஜெயலலிதாவின் சின்னம் தாமரை என்று புது உருட்டு உருட்டினார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிதாக கட்சி துவக்கி உள்ள நடிகர் விஜய் கரூரில் 41 பேர் இறந்தும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவிக்காத ஒருவர் தமிழகத்தை எப்படி ஆள முடியும். அந்த நடிகர் ஒருநாள் பிரசாரம் செய்கிறார். மறுநாள் கை வலி, கால் வலி, வயிற்று வலி, போலீஸ் அனுமதி தரவில்லை என ஏதாவது காரணம் கூறிவிட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இவர் எப்படி தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும் என்றார்.

Related Stories: